Posts

கந்த சஷ்டி கவசம் (Kandha Sasti Kavasam)

நேரிசை வெண்பா துதிப்போர்க்கு வல்வினைபோம் துன்பம்போம் நெஞ்சில் பதிப்போர்க்கு செல்வம் பலித்துக் கதித்தோங்கும் நிஷ்டையும் கைகூடும் நிமலனருள் கந்தர் சஷ்டி கவசம் தனை. குறள் வெண்பா அமரரிடர் தீர அமரம் புரிந்த குமரனடி நெஞ்சே குறி… நூல் சஷ்டியை நோக்கச் சரவண பவனார் சிஷ்டருக்குதவும் செங்கதிர் வேலோன் பாதம் இரண்டில் பன்மணிச் சதங்கை கீதம் பாடக் கிண்கிணி யாட (2) மையல் நடனஞ்செய்யும் மயில்வா கனனார் கையில் வேலால் எனைக் காக்கவென்றுவந்து வரவர வேலா யுதனார் வருக வருக வருக மயிலோன் வருக இந்திரன் முதலா எண்டிசை போற்ற மந்திர வடிவேல் வருக வருக! வாசவன் மருகா வருக வருக நேசக் குறமகள் நினைவோன் வருக ஆறுமுகம் படைத்த ஐயா வருக நீறிடும் வேலவன் நித்தம் வருக சிரகிரி வேலவன் சீக்கிரம் வருக! சரவண பவனார் சடுதியில் வருக ரவண பவச ர ர ர ர ர ர ர ரிவண பவச ரி ரி ரி ரி ரி ரி ரி விநபவ சரவண வீரா நமோநம நிபவ சரவண நிறநிற நிறென வசுர வணப வருக வருக அசுரர் குடிகெடுத்த ஐயா வருக என்னை ஆளும் இளையோன் கையில் பன்னிரண் டாயுதம் பாசாங் குசமும் பரந்த விழிகள் பன்னிரண் டிலங்க விரைந்தெனைக் காக்க வேலோன் வருக ஐயும் கிலியும் அடைவுடன் சவ்வும் உய்யொளி சௌவும் உய...

தேவார பாடல்கள் (Thavara Padalgal)

  தேவாரம் தோடுடைய செவியன் விடையேறியோர் தூவெண்மதி சூடிக்       காடுடையசுட லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் கள்வன்        ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த         பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. திருப்பல்லாண்டு   மன்னுக தில்லை வளர்கநம்   பத்தர்கள் வஞ்சகர் போயகல பொன்னின்செய் மண்டபத் துள்ளே புகுந்து   புவனி யெல்லாம் விளங்க அன்னநடை மடவாள் உமைகோன்   அடியோ முக்கருள் புரிந்து பின்னைப் பிறவி யறுக்க நெறிதந்த   பித்தற்குப் பல்லாண்டு கூறுதுமே.   

அஷ்டலட்சுமி ஸ்தோத்திரம் (Ashta Lakshmi Stotram)

உலகமெல்லாம் காத்து நிற்கும் தேவிமகாலக்ஷ்மி உன்பாதம் சரணடைந்தோம் அஷ்டலக்ஷ்மி உலகெங்கும் ஆட்சி செய்யும் அஷ்டலெக்ஷ்மி கலையாவும் நிறைந்தவளே அஷ்டலக்ஷ்மி நிலையான அருட்செல்வம் அருள்பவள் அவளே உலகளந்த திருமாலின் வலமார்பில் உறைபவளே (உலகெங்கும்) ஸ்ரீ லட்சுமி பாற்கடலில் தேவர் அமுதம் கடையும் போது பாரெல்லாம் வியந்திட நாரணி உதித்தாள் நாரணனும் தேவியை மார்பினில் தாங்கி நின்றார் பூரணியும் பூவுலகைக் காக்க வந்தாள் அவளே ஸ்ரீ லக்ஷ்மி தேவி லக்ஷ்மி ஆதிலட்சுமி இரு கண்கள் திருக்கரங்கள் கொண்டவள் அவளே இகபரசுகம் யாவும் கொடுப்பவள் அவளே அபயம் அளிப்பவளே ஆதிலக்ஷ்மி அவளே ஆபரணம் அணிந்த ஒளிக்கதிர் ராணி அவளே எழில் மலரத் தோரணங்கள் சூழ்பவள் அவளே அழகிய தாமரைமேல் வாழ்பவள் அவளே மஞ்சள் நிறஉடை தரித்து மலர்மாலை அணிந்தவளே மங்களம் நிறைந்தவளே வல்லமை மிகுந்தவளே ஆதிலக்ஷ்மி அன்னை ஆதிலக்ஷ்மி சந்தானலட்சுமி ஜடாமகுடம் அணிந்து காட்சி தந்தாள் அன்னை இடுப்பினில் சுகுமாரனை ஏந்தி நின்றாள் வீரம் மிகுந்த அபயக் கரங்கள் இரண்டிலே பூரணக் கும்பமும் வைரக் கங்கணமும் விளங்க அழகிய மாதரும் தீ பமும் தாங்கியே எழில் வெண் சாமரம் வீசியிருக்க முத்திழைத்த உரையோடு ...

சகலகலாவல்லி மாலை (Sakalakalavalli Maalai)

வெண்டா மரைக்கன்றி நின்பதந் தாங்கவென் வெள்ளையுள்ளத் தண்டா மரைக்குத் தகாதுகொ லோசக மேழுமளித் துண்டா னுறங்க வொழித்தான்பித் தாகவுண் டாக்கும்வண்ணம் கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே. நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும் பாடும் பணியிற் பணித்தருள் வாய்பங்க யாசனத்திற் கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றுமைம்பாற் காடுஞ் சுமக்குங் கரும்பே சகல கலாவல்லியே. அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்ளமு தார்ந்துன் னருட்கடலிற் குளிக்கும் படிக்கென்று கூடுங்கொ லோவுளங் கொண்டுதெள்ளித் தெளிக்கும் பனுவற் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு களிக்குங் கலாப மயிலே சகல கலாவல்லியே. தூக்கும் பனுவற் துறைதோய்ந்த கல்வியுஞ் சொற்சுவைதோய் வாக்கும் பெருகப் பணித்தருள் வாய்வட நூற்கடலும் தேக்குஞ் செழுந்தமிழ்ச் செல்வமுந் தொண்டர்செந் நாவினின்று காக்குங் கருணைக் கடலே சகல கலாவல்லியே. பஞ்சப் பிதந்தரு செய்யபொற் பாதபங் கேருகமென் நெஞ்சத் தடத்தல ராததென் னேநெடுந் தாட்கமலத் தஞ்சத் துவச முயர்த்தோன்செந் நாவு மகமும்வெள்ளைக் கஞ்சத் தவிசொத் திருந்தாய் சகல கலாவல்லியே. பண்ணும் பரதமுங் கல்வியுந் தீஞ்சொற் பனுவலும்யான் எண்ணும் பொ...

துக்க நிவாரண அஷ்டகம் (Dhukka Nivarana Ashtakam)

மங்கள ரூபிணி மதியொளி சூலினி மன்மத பாணியளே சங்கடம் நீங்கிட சடுதியில் வந்திடும் சங்கரி சவுந்தரியே கங்கண பாணியன் கனிமுகம் கண்டநல் கற்பகக் காமினியே ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்கநிவாரணி காமாட்சி கான் உறுமலர் எனக் கதிர் ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள் தான்உறு தவஒளி தார்ஒளிமதி ஒளி தாங்கியே வீசிடுவாள் மான்உறு விழியாள் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள் ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி சங்கரி சவுந்தரி சதுர்முகன் போற்றிட சபையினில் வந்தவளே பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே எம்குலம் தழைத்திட எழில் வடிவுடனே எழுந்த நல் துர்க்கையளே ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி   தணதண தந்தண நவில்ஒளி முழங்கிட தண்மதி நீ வருவாய் கணகண கங்கண கதிர்ஒளி வீசிட கண்மணி நீ வருவாய் பணபண பம்பண பறைஒலி கூவிட பண்மணி நீ வருவாய் ஜெய ஜெய சங்கரி கவுரி கிருபாகரி துக்க நிவாரணி காமாட்சி   பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்த நல் குமரியளே சங்கடம் தீர்த்திட சமர் அது செய்த நல் சக்தி எனும் மாயே ஜெய ஜெய சங்கரி கவுரி ...

சிவபுராணம் (Sivapuranam)

தொல்லை இரும்பிறவி சூழும் தளை நீக்கி அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே – எல்லை மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன் திருவாசகம் என்னும் தேன்… திருசிதச்ம்பலம் நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க கோகழி ஆண்ட குருமணிதன் தாள் வாழ்க ஆகமம் ஆகிநின்று அண்ணிப்பான் தாள் வாழ்க ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க (5) வேகம் கெடுத்துஆண்ட வேந்தன் அடி வெல்க பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்தன் பெய்கழல்கள் வெல்க புறந்தார்க்குச் சேயோன் தன் பூங்கழல்கள் வெல்க கரங்குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க சிரம்குவிவார் ஓங்குவிக்கும் சீரோன் கழல் வெல்க (10) ஈசன் அடிபோற்றி எந்தை அடிபோற்றி தேசன் அடிபோற்றி சிவன் சேவடி போற்றி நேயத்தே நின்ற நிமலன் அடி போற்றி மாயப் பிறப்பு அறுக்கும் மன்னன் அடி போற்றி சீரார் பெருந்துறை நம் தேவன் அடி போற்றி  (15) ஆராத இன்பம் அருளும் மலைபோற்றி சிவன் அவன் என்சிந்தையுள் நின்ற அதனால் அவன் அருளாலே அவன்தாள் வணங்கிச் சிந்தை மகிழச் சிவ புராணம் தன்னை முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பன் யான். (20) கண் நுதலான் தன்கருணைக் கண்காட்ட வந்தெய்தி எண்ணுதற்கு எட்டா எழிலார் கழல் இறைஞ்...

பஞ்சபுராணம் (Pancha Puranam)

திருச்சிதம்பலம் விநாயகர் துதி ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தின் இளம் பிறை போலும் எயிற்றனை நந்தி மகன் தனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்று கின்றேனே!   தேவாரம்  பிடியதன் உருவுமை கொளமிகு கரியது வடிகொடு தனதடி வழிபடு மவரிடர் கடிகண பதிவர அருளினன் மிகுகொடை வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே. திருவாசகம் பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம் பேசுவதும் திருவாயால் மறைபோலுங் காணேடீ பூசுவதும் பேசுவதும் பூண்பதுவுங் கொண்டென்னை ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல்பானான் சாழலோ.   திருவிசைப்பா ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே !   உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே ! தெளிவளர் பளிங்கின் திரள்மணிக் குன்றே !   சித்தத்துள் தித்திக்கும் தேனே ! அளிவளர் உள்ளத்(து) ஆனந்தக் கனியே !   அம்பலம் ஆடரங் காக வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்   தொண்டனேன் விளம்புமா விளம்பே.   திருப்பல்லாண்டு பாலுக்குப் பாலகன் வேண்டி   அழுதிடப் பாற்கடல் ஈந்தபிரான் மாலுக்குச் சக்கரம் அன்றருள்   செய்தவன் மன்னிய தில்லைதன்னுள் ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற   சிற்றம் பலமே இடமாகப் பாலித்து நட்...